இலக்கணம்


உன் நட்பிற்கு இலக்கணம்
யார் என்று
கேட்டார்கள்
அன்று பள்ளியில் அவள்
இன்று கல்லுரியில் நீ

இயற்கை

பன்மடங்கு பெறுகிவிட்ட
மட்கள்தொகையில்
எல்லோரும்
எப்படியாவது
எதற்காவது
இயற்கையை நேசித்துவிடுகிறோம்!

மழை,மலை,பூ
புறா,காற்று,காத்தாடி
இப்படி
ஏதேனும் ஒன்றை......

இயற்கையின் அத்துமீறல்
இந்த பூமி!
மனிதக் கோட்பாடை
தாண்டாமல்
தன்னடக்கமாய் நம்
இதயத்தை தொட்டுச்
செல்லும் இயற்கை!

ஆழ்கடலை தொட்டுவிட்டோம்
ஆகாயத்தை நெருங்கிவிட்டோம்
ஆனால்
இயற்கையின் அந்தரங்கம்
மட்டும்
புலப்படவில்லை!

பூவை நேசிக்கும் மங்கை
உண்டு
நிலவை நேசிக்கும் ஆண்களும்
உண்டு
இயற்கை கற்றுக்கொடுத்த
காதலை
நேசிக்காதவன் எவன்?

எச்சரிக்கை!
இயற்கை அழகானது
மட்டுமல்ல
இதயத்தின் ஆழத்தை
தொட்டு நம்
புத்தியை பேதலிக்க
வைத்துவிடும்...

ஓயாது இயற்கையின் அட்டகாசம்.........
அழகானது இயற்கையின் சவகாசம்.......