எப்போதும் என்னுடன்

பிஞ்சு வயசுல என்
நெஞ்சுல
ஆலமரமா வளந்தவ!

அறியா வயசுல
ஊரரிய முத்தம்
கொடுத்தவ!

அப்பன் மாருமேல
வளந்து என்
நெஞ்சோடு வளந்தவ!

இப்போ அறுவது
வயசு.................
இன்னும்
கூடவே வறாயா
சுடுகாட்டுக்கு!

தாய்மை இவள்

குறும்புக் கார பெண் இவள்
ஓவியத்தின் அழகு இவள்
இரவிற்கு வெளிச்சம் இவள்
பூக்களுக்கு முத்தம்
கொடுத்தவள்
புன்னகைக்கு அர்த்தம்
சொன்னவள்

பாலைவன பூக்கலைப் போல்
எப்போதும் தனித்திருப்பவள்..
ஆழ்கடலின் ஆழத்தை
தொட்டவள்
கோபத்தின் கொந்தளிப்பில்
சூரியனை சுட்டவள்.

அழகை காட்டிக் கொடுத்தவள்
பொறாமையை கிள்ளி விட்டவள்
புன்னகையை சிந்தவிட்டு
பல இதயங்களை
கட்டிப்போட்டவள்....

கண்ணாடியின் பிம்பம் இவள்!
ஒட்டாத பாதரசம் இவள்!

கண்ணகிக்கு சொந்தக்காரி
வேசத்திற்கு மோசக்காரி
கற்பனைக்கு கூலிக்காரி

அன்பிற்குரியவள்
காதலுக்கு இலக்கணம் கொடுத்தவள்
நட்பிற்கு வடிவம் கொடுத்தவள்
மொத்தத்தில்
பெண்மைக்கு தாய்மை இவள்!