சண்டை

அடிக்கடி சண்டையிடும்
நமக்கு தான் தெரியும்
இது காதலின்
அந்தரங்க நேரம் என்று

கண்ணாடி

என்னை முதல் முதலாய்
வெட்கப்பட வைத்தவன்
நீ
அதனால் தான்
என்னவோ
நான் முகம் பார்க்கும்
கண்ணாடி கூட
என்னை வெட்கப்பட வைக்கிறது.....

குழந்தை

உன்னை தாயாக
பார்க்க தவறிய
நேரங்களில்
உன்னை என்
குழந்தையாய் பார்க்கிறேனடி......

வாழ்த்துகிறேன்

இதோ வந்துவிட்டேனடி
உன் திருமணத்திற்கு...

எனக்கு அழைப்பில்லை
உன்னை அதிகம்
நேசித்த நான் மட்டுமே
வாழ்த்தமுடியும்

தோற்றுவிட்டோமோ?
தோற்கடிக்கபட்டோமோ?
என்னை மறந்துவிட்டாய்

அழுகை வறத்தான் செய்கிறது
கடைசியாக ஒருமுறை
அழுதுவிட்டுத்தான் போகிறேனே
உனக்காக
என் காதலுக்காக

தேவதையடி நீ
மணக்கோலத்தில்

என்னை பார்த்திருப்பாய்
என்று நினைக்கிறேன்....
உன்னுடைய கடைசி
நினைவுகள் என்னுல்
எரிந்துகொண்டு இருக்கிறது.

உன்னை பார்க்க வேண்டும்
என்ற ஆசை
நிறைவேறிவிட்டது.
நீ எப்போதும்
புன்னகையுடன் வாழ
வாழ்த்துகிறேன்...

உனக்கும் எனக்கும்

பட்டமரம் அது பூக்கிறது
உனக்காக
பூக்கள் தந்து அது சிரிக்கிறது
எனக்காக

நீ பார்க்கிறாய்
நான் சிரிக்கிறேன்

உன்னை தொட்டுச்செல்லும்
தென்றலும் கூசும்
நீ விட்டுச்செல்லும் வாசமும் வீசும்
கண்கள் சுலலுதே
நீ சுலற்றினாய்
என் நிம்மதியை நீ
எடுத்துச்சென்றாய்

காதலி

மறக்காமல் ஒரு
முத்தம்
தந்து விடு
என் கவிதைக்கு
ஒரு
காதலி தேவைப்படுகிறாள்

கற்பனை

நான் அதிகம்
கற்பனை செய்பவனடி
அதனால் தான்
நீ என்னை
காதலிப்பதாய்
கற்பனையில் வாழ்கிறேன்...

சுதந்திர தின வாழ்த்துக்கள்

மண் பொன் பெண்
ஆசை யில்லா மானுடனை
சுதந்திர இந்தியாவில்
காண யேங்கும்
கோடிக்கணக்கான  இந்தியனில்
நானும் ஒருவன்.

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

அழகு



இப்படி ஒரு அழகை
ஆட்கொள்ள தானடி
நான் இத்தனை வருடம்
கண் இமைக்காமல் காத்திருந்தேன்.

கோபம்



எப்படியும் கடைசியில் என்னை
கட்டிப்பிடிக்கதான் போகிறாய்
அப்புறம் எதற்க்கு 
உன் செல்ல கோபத்தை தூதாக
அனுப்புகிறாய்

என்றும்


கட்டிப்பிடித்தால் காதல்
அதிகரிக்குமாம்

எங்கே என்னை
விட்டுக்கொடுக்காமல் கட்டிக்கொண்டு
இரு பார்க்கலாம்.....

சாபம்


எப்போதும் உன்னை கட்டிப்பிடித்துக்கொண்டு
இருக்கவே என்
விரல்கள் கெஞ்சிக்கொண்டு இருக்கிறது.

தீராத சாபத்தை கொடுத்துவிட்டாய்
ஓயாமல் கட்டிப்பிடிக்கிறேன்.

முடியவில்லையடா

முடியவில்லையடா
உன்னை மறப்பதற்கு
எவ்வளவோ போராடிவிட்டேன்
முடியவில்லை....
சொந்தத்தை உதரிவிட்டேன்
உன்னை சொந்தமாக்கிக்கொள்ள
புரப்பட்டுவிட்டேன்
உன் வாழ்க்கையில்
என்னை புதைப்பதற்கு...

கட்டுப்பட்டுவிட்டேன்


ஆசைக்கு ஒரு பெண்
என்று என்னை
அன்பாய் வளர்த்தார்கள்

என் சிரிப்பை கண்டு
சிலிர்த்தார்கள்
என் அழுகை கண்டு
கலங்கினார்கள்
என்னை சீவி சிங்காரித்து
என் அழகை ரசித்தார்கள்

நான் வயதுக்கு வந்ததும்
சந்தோஷத்தில் மிதந்தார்கள்

பொறுப்புகள் கூடியது

அளவுடன் சிரிக்க கற்றுக்கொண்டேன்
அளவுடன் பேச கற்றுக்கொண்டேன்
வெட்கப்பட வேண்டும்

பருவ வயது கொஞ்சம்
மோசம் தான்
கட்டுப்பாட்டுடன் வளர்ந்தேன்

திருமணம் முடிவானது

அறிமுகம் இல்லாத
ஒருவருடன் என்
மீதி வாழ்க்கையை ஒப்படைக்க
இசைந்துவிட்டேன்


என் அப்பாவிற்கு பிறகு
என்னை அதிகம் நேசிப்பவர்
என்னை எப்போதும் காதலிப்பவர்
அடிக்கடி என்னை கட்டிப்பிடிப்பவர்
இப்படி
எத்தனையோ ஆசைகளுடன்
கட்டுப்பட்டுவிட்டேன்

மனைவியாய் என் வாழ்க்கையை
ஒப்படைத்துவிட்டேன்......

முத்தம்


நீ முத்தம் தரும்போலுது
என் முகங்கள்
சிவக்கிறது

உன் முத்த நாடகத்தில்
நான் மொத்தம் கரைகின்றேன்

-சுதாகர் ராமகிருஷ்ணன்

புகைப்படம்:http://www.facebook.com/vijayeesam

பூக்கள்



உன் புன்னகைக்காகவே
இந்த பூக்களை
சாகடிக்கிறேன்

நீ

நீ அழகாய் இருப்பதனாலோ
என்னவோ
நானும் சில சமயம்
அழகாய் தெரிகிறேனடி..

காதலர் தின வாழ்த்துக்கள்

வீசும் காற்றாய்
உன் பார்வையில்
நான்
ஈர்க்கப்பட்ட அந்த நொடி
நான் காதல் வசப்பட்டேன்

உன்னை பார்க்கும் போதெல்லாம்
ஓர் ஆனந்தம்
என் உயிர் அணுக்கள்
ஒவ்வொன்றும் சண்டையிடும்
கூச்சல் சத்தம்

அடி மனதில் ஆனந்தம்
யாரிம் சொல்ல?
உனக்கான காதல் என்னை
அழகழகாய் சிந்திக்கவைத்தது
கலர்கலராய் மாற்றியது

நீ தொட்டுப்பேசிய
அந்த நொடி
என் காதலின் முதல்
ஆனந்தக் கண்ணீரடி

என்னை தொட்டுப்பேசிய போதும்
வலிக்காமல் முத்தம் கொடுத்த போதும்
அழகாய் கட்டி அனைத்த போதும்
காதல் எனக்கு'
அழகாய் தெரிந்ததடி

உன்னைபோல் யாரடி
எங்கு கண்டுபிடிப்பேன்
முதல் காதல் மறக்க முயல்கிறேன்
முதல் முத்தம் அழிக்க முயல்கிறேன்
முதல் அழுகை துடைக்க முயல்கிறேன்
காத்துக்கொண்டு இருக்கிறேன்
உன் காதலை மறுக்க முடியாமலும்
மறைக்க முடியாமலும்
மறக்க முடியாமலும்

                                        --சுதாகர் ராமகிருஷ்ணன்


ஆசை


என்னுடைய ஆசைகளில்
மிகப்பெரிய ஒன்றை
உன் கால் கொலுசு
நிறைவேற்றிக் கொண்டு
இருக்கிறது....

நிஜம்


காதல் அப்படி ஒன்றும்
உன்னைவிட அழகாய்
தெரியவில்லையடி....

என் நொடி பொழுது
ஒவ்வொன்றும் உன்னை
தொலைத்துவிட்ட ஏக்கத்தில்
தவித்திக்கொண்டிருக்கிறது...
மாற்றம் மட்டுமே நிஜம்
என்ற நம்பிக்கையில்
காத்திக்கொண்டு இருக்கிறேன்
உன்னை மறப்பதற்கு........

முதுமை

தனிமையில் கழித்த
என் இளமை
பருவமேல்லாம்
இப்போது உன் துணையோடு
துள்ளிச்செல்கிறது நம்
முதுமை காலத்தை நோக்கி....................








பிரிவு


உன் பிரிவு என்னை
அதிகம் காயப்படுத்திவிட்டதடி
தித்திப்பாய் இருந்த
காதல் இப்போது
கசக்க தொடங்கிவிட்டதடி...
உன் நினைவுகள் என்னை
மறக்கச் செய்யுதடி...
என்னை இழந்து கொண்டும்
உன்னை சுமந்து கொண்டும்
வாழ்ந்துகொண்டு இருக்கிறேனடி....

என் இதயம்

என்னையே அடிக்கடி
மறந்துவிடுகிறேன்
உன் அன்பின் ஆக்கிரமிப்பில்
என் இதயம் கூட
இப்போதெல்லாம்
உன்னிடத்தில் தான்
துடிக்கிறது....

கைரேகை


என் கைரேகையில் நீ
பதித்த முத்தத்தை
பார்த்துக்கொண்டே என்
நிமிடங்கள் கழிகின்றது...........
என் தனிமையில் உன்
நினைவுகள் தவமிருக்கின்றது..