காதல் அப்படி ஒன்றும்
உன்னைவிட அழகாய்
தெரியவில்லையடி....
என் நொடி பொழுது
ஒவ்வொன்றும் உன்னை
தொலைத்துவிட்ட ஏக்கத்தில்
தவித்திக்கொண்டிருக்கிறது...
மாற்றம் மட்டுமே நிஜம்
என்ற நம்பிக்கையில்
காத்திக்கொண்டு இருக்கிறேன்
உன்னை மறப்பதற்கு........
உன் பிரிவு என்னை
அதிகம் காயப்படுத்திவிட்டதடி
தித்திப்பாய் இருந்த
காதல் இப்போது
கசக்க தொடங்கிவிட்டதடி...
உன் நினைவுகள் என்னை
மறக்கச் செய்யுதடி...
என்னை இழந்து கொண்டும்
உன்னை சுமந்து கொண்டும்
வாழ்ந்துகொண்டு இருக்கிறேனடி....