வாழ்த்துகிறேன்

இதோ வந்துவிட்டேனடி
உன் திருமணத்திற்கு...

எனக்கு அழைப்பில்லை
உன்னை அதிகம்
நேசித்த நான் மட்டுமே
வாழ்த்தமுடியும்

தோற்றுவிட்டோமோ?
தோற்கடிக்கபட்டோமோ?
என்னை மறந்துவிட்டாய்

அழுகை வறத்தான் செய்கிறது
கடைசியாக ஒருமுறை
அழுதுவிட்டுத்தான் போகிறேனே
உனக்காக
என் காதலுக்காக

தேவதையடி நீ
மணக்கோலத்தில்

என்னை பார்த்திருப்பாய்
என்று நினைக்கிறேன்....
உன்னுடைய கடைசி
நினைவுகள் என்னுல்
எரிந்துகொண்டு இருக்கிறது.

உன்னை பார்க்க வேண்டும்
என்ற ஆசை
நிறைவேறிவிட்டது.
நீ எப்போதும்
புன்னகையுடன் வாழ
வாழ்த்துகிறேன்...

உனக்கும் எனக்கும்

பட்டமரம் அது பூக்கிறது
உனக்காக
பூக்கள் தந்து அது சிரிக்கிறது
எனக்காக

நீ பார்க்கிறாய்
நான் சிரிக்கிறேன்

உன்னை தொட்டுச்செல்லும்
தென்றலும் கூசும்
நீ விட்டுச்செல்லும் வாசமும் வீசும்
கண்கள் சுலலுதே
நீ சுலற்றினாய்
என் நிம்மதியை நீ
எடுத்துச்சென்றாய்

காதலி

மறக்காமல் ஒரு
முத்தம்
தந்து விடு
என் கவிதைக்கு
ஒரு
காதலி தேவைப்படுகிறாள்

கற்பனை

நான் அதிகம்
கற்பனை செய்பவனடி
அதனால் தான்
நீ என்னை
காதலிப்பதாய்
கற்பனையில் வாழ்கிறேன்...

சுதந்திர தின வாழ்த்துக்கள்

மண் பொன் பெண்
ஆசை யில்லா மானுடனை
சுதந்திர இந்தியாவில்
காண யேங்கும்
கோடிக்கணக்கான  இந்தியனில்
நானும் ஒருவன்.

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

அழகு



இப்படி ஒரு அழகை
ஆட்கொள்ள தானடி
நான் இத்தனை வருடம்
கண் இமைக்காமல் காத்திருந்தேன்.

கோபம்



எப்படியும் கடைசியில் என்னை
கட்டிப்பிடிக்கதான் போகிறாய்
அப்புறம் எதற்க்கு 
உன் செல்ல கோபத்தை தூதாக
அனுப்புகிறாய்