தாஜ்மஹால் அழகு

இந்தியாவின் வெள்ளை மாளிகை

அடுக்கடுக்கான பாதுகாப்பு
இல்லை
அடையாளம் தெரியாத ஆளே
இல்லை
அடைக்கிவைக்க ராஐா இல்லை
சுதந்திரமாய்
அடைக்கப்பட்டிருக்கிறது
ஒரு காவியம்.

மும்தாஜ் அழகா? காதல் அழகா?

தாஜ்மஹால் அழகு

தாரம் பலருண்டு
அதில்
மோகம் சிலருண்டு
ஆனால் காதலுக்கு அவளுண்டு

சலவை கல்லை கொண்டு
ஒரு சிற்பம் செய்து
அதில் ஒரு
சிலையை புதைத்துவிட்டான்.

புதைக்கப்பட்டவளை மீட்டேடுக்க
வந்த கூட்டமா?
இல்லை அடக்கம்
செய்யப்பட்டவளுக்கு அஞ்சலி
செலுத்த வந்த கூட்டமா?

காவியத்தை கண்டு
காதலை ரசிக்கும் போது
ரகசியமாய் ஒரு
கதறல் கேட்டது.

"கூச்சலிடாமல் என்
நினைவுச்சின்னத்தை
ரசியுங்கள்
அவள் நிம்மதியாக
உறங்கட்டும்".