Showing posts with label புன்னகை. Show all posts
Showing posts with label புன்னகை. Show all posts

கண்ணாடி

என்னை முதல் முதலாய்
வெட்கப்பட வைத்தவன்
நீ
அதனால் தான்
என்னவோ
நான் முகம் பார்க்கும்
கண்ணாடி கூட
என்னை வெட்கப்பட வைக்கிறது.....

பூக்கள்



உன் புன்னகைக்காகவே
இந்த பூக்களை
சாகடிக்கிறேன்

அரவணைப்பு




எப்படியடி உன்னால் மட்டும்
இப்படி சிரிக்க முடிகிறது.....

என் 26 ஆண்டு கால வாழ்க்கை
உன் புன்னகையில்
பாலாய்போகையில்
உன் அரவணைப்பு
என்னை வாழவைக்கிறது

புன்னகை


உயிரை கையில்
ஏந்துகிறாய்
என் வாழ்க்கையில்
ஒளியாய் வீசுகிறாய்

உன் புன்னகை ஒன்றே
போதுமடி
என் வாழ்க்கையில்
நீ தான் எல்லையடி...

காலம் முழுக்க
காத்திருப்பேன் என்
காதலிலே நீ
பூத்துவிட்டாய்..

பட்டாம்பூச்சி பார்த்திட
வேண்டும்
உன் புன்னகை கண்டு
ஓடிட வேண்டும்

உன் கையை பிடித்து
வாழ்ந்திட வேண்டும்
வாழ்ந்தது போக
செத்திட வேண்டும்

இந்த வாழ்க்கை
ஒன்றே போதுமடி
எந்த ஜென்மத்திலும்
நீ தான்
என் வாழ்க்கையடி...