அன்புள்ள....................?

காற்றோடு காற்றாய்
கலந்தவளே!
என் உயிரோடு உயிராய்
புதைந்தவளே!
உன் கைரேகை பட்ட
இடமேல்லாம்
என் இதழ்ரேகையை
பதிக்கிறேன்.

பட்டாம்பூச்சி கூட்டுக்குள்ளே
குடித்தனம் புகுந்தாய்!
முத்தங்களை பெற்றுக்கொண்டு
இதழ்கள் சிவந்தாய்!
இடம்மாறி துடிக்கும்
இதயம் கூட உன்னை கண்டவுடன்
இடைவெளி விட்டு
துடிக்கின்றது.

குட்டி குட்டியாய் கோடி
ஆசைகள்
என் இதயம் போதவில்லை
பார்வை பட்ட
இடமேல்லாம் தேடிக்கொண்டு
இருக்கிறேன் எனக்கான
இதயத்தை!

அழகு


எப்போதும்
மௌனமாகவே இருக்கிறாய்
அதனால் தான்
என்னவோ
என் கவிதை
அழகாய் இருக்கிறது.