என் பெண்மை



எனக்கு சொந்தமானவனே
ஒரு முறை என்னை
கட்டியணைத்துவிட்டு செல்
உன் அரவணைப்பில் தான்
என் பெண்மை
கொஞ்சம் இளைப்பாறிக் கொள்கிறது ...

ரோஜா


இதோ இந்த ரோஜாவை போல
நானும் ஒரு நாள்
உன் கூந்தலை அலங்கரிக்க
காத்துக்கொண்டு இருப்பேன்
அன்று வரை இப்படி
வாடிக்கொண்டு இருப்பேன்

அரவணைப்பு




எப்படியடி உன்னால் மட்டும்
இப்படி சிரிக்க முடிகிறது.....

என் 26 ஆண்டு கால வாழ்க்கை
உன் புன்னகையில்
பாலாய்போகையில்
உன் அரவணைப்பு
என்னை வாழவைக்கிறது

மயிலிறகு





நோட்டு புத்தகத்தில்
மயிலிறகை ஒழித்துவைத்து
குட்டிபோடும் என்று
ஏங்கியது குழந்தை பருவம்....
இன்றும் ஏங்கிக் கொண்டு
இருக்கிறது மயிலிறகை தேடி?

செத்துப்பிழைக்கிறேன்



கண்ணீராய் என் காதல் கரையும்
போது நீ என் அருகில்
இருப்பதில்லை

எதற்காக என்னை
இப்படி அழவைக்கிறாய்

ஒவ்வொரு இரவும் என்னை
கொன்று புதைக்கிறாய்
நானும் செத்துப்பிழைக்கிறேன்..

தேவதை

தேவதையை தொலைத்துவிட்ட
ஏக்கத்தில் தொடங்கியது
எனது கவிதை............

பள்ளி பருவத்தில் என்னை
நேசித்த அவளை நிராகரித்திவிட்டேன்...

காதலை சுமந்து வந்தவளை
கண்ணீருடன் அனுப்பிவைத்தேன்..
எத்தனையோ தேடலுக்கு
பின்பு
அவளை கண்டுபிடித்தேன்...

அவள் சாதாரன பெண்
தான்
ஆனால் எனக்கு மட்டும்
கிராமத்து தேவதையாய்
குழந்தையின் சிரிப்பாய்
தாய் பாசத்தால்
என்னை ஏங்கவைத்தவள்....

அன்று காதலை மறுத்தவன்
இன்று ஏங்குகிறேன்....

நேசிக்கிறேன்
மனைவியாய் ஏற்றுக்கொள்ளாமல்
தொலைத்துவிட்ட தேவதையை
தாய்பாசத்தோடு நேசிக்கிறேன்..

தேவதையே!
உன் கணவன் அதிர்ஷ்டசாலியடி
தேவதையை
கைபிடிக்க போகும் யோகம்
எத்தனைபேருக்கு வரும்...

ஒப்படைத்துவிடுகிறேன்

முத்தத்தை மூலதனமாக
கொண்டவனே!!!!
உனக்காகவே என்
பெண்மையை நான்
பாதுகாத்தேன்..
முத்தத்தை முகவரியாக்கிக்
கொண்ட உனக்கு
என் பெண்மையை ஒப்படைத்துவிடுகிறேன்..............


இரவுகள்

எத்தனையோ இரவுகள்
தனிமையில் கழித்த
எனக்கு
உன் மடி சாய்ந்த
இரவுகள் மட்டும்
விடிய மறுக்கிறது...........

புன்னகை


உயிரை கையில்
ஏந்துகிறாய்
என் வாழ்க்கையில்
ஒளியாய் வீசுகிறாய்

உன் புன்னகை ஒன்றே
போதுமடி
என் வாழ்க்கையில்
நீ தான் எல்லையடி...

காலம் முழுக்க
காத்திருப்பேன் என்
காதலிலே நீ
பூத்துவிட்டாய்..

பட்டாம்பூச்சி பார்த்திட
வேண்டும்
உன் புன்னகை கண்டு
ஓடிட வேண்டும்

உன் கையை பிடித்து
வாழ்ந்திட வேண்டும்
வாழ்ந்தது போக
செத்திட வேண்டும்

இந்த வாழ்க்கை
ஒன்றே போதுமடி
எந்த ஜென்மத்திலும்
நீ தான்
என் வாழ்க்கையடி...

இது அப்பாவுக்காக


பொம்பளபுள்ள
பொரந்திருக்கு என
சொந்த பந்தம்
சங்கட்டப் பட
என் அழு குரலை
கேட்டு ஆனந்தப்பட்ட
ஒரு ஜீவன்
"அப்பா"

நான் எட்டி உதைத்ததையும்
கட்டி புரண்டதையும்
ஆனந்தமாய்
தாங்கிக் கொண்ட
நாயகன்....

எனக்கான நிமிடங்கள்
ஒவ்வொன்றும்
அவரது வாழ்க்கை..

என் பிறப்பு முதல்
நான்வயதுக்கு வந்த
பிறகும்
என்னை கட்டி
அனைத்து முத்தமிடும்
அன்பிற்குரியவன்
"அப்பா"

அப்பாக்களை நேசிக்கும்
மகள்களுக்கு
மட்டும் தெரியும்
முத்தம் காமத்தில்
சேராத காதலின்
பரிசு என்று.

அப்பாவை இழந்த மகளுக்கு
அப்பாவை காதலிக்கும்
மகளுக்கும்
மட்டும் தெரியும்
அப்பாவின் வாழ்க்கை
எனக்கானது என்று...

காதல் இனிக்கிறது

கண்ணுக்குள்ளே காதல்
வைத்து
நெஞ்சுக்குள்ளே உன்னை
வைத்தேன்
நீ வரும் நேரம் எல்லாம்
நெஞ்சம் இனிக்கிறதே!
இமைகள் மூட மறுக்கிறதே!

விழிகள்

காதலி: உன் இதயத்துடிப்பை
கேட்டுக்கொண்டே
என் இமை மூட வேண்டுமடா....

காதலன்: உன்னை என் இதயத்தில்
சுமந்து கொண்டே
என் விழிகள் மூட வேண்டுமடி...

மன்னித்துவிடு.....

என்னை மறந்து
மன்னிப்பதற்கு உன்னால்
முடியும் என்றால்
மன்னித்து விடு....
சாதி என்னும்
சவப்பெட்டியில் இருந்து
என்னால்
மீண்டு வரமுடியவில்லையடா?
நம் இதயம்
இருகப்பிணைத்த பிறகு
சாதி என்ன செய்யும்
என்று தோன்றியதடா
அன்று....
கால ஒட்டத்தில்
சவப்பெட்டியில் சிறையிட
பட்டேனடா?
திசை மாற்றப்பட்டோம்
நமக்கான
வாழ்க்கையோடு மறந்துவிடு
இல்லையேல்
மன்னித்துவிடு.....

இன்னும் எத்தனை காலம்

இன்னும் எத்தனை
காலம் காதலித்துக்கொண்டே
இருப்பது...

மறுஜென்மம் தேவையில்லை
எனக்கு
இந்த ஓரு ஜென்மம்
போதும்
உன்னுடன் வாழ்வதற்க்கு.....

இழந்துவிட்டு செல்கிறேன்.....

உன்னை மறந்துவிட்டு செல்கிறேன்
என்று கலங்காதே
காதலா!
உன்னை மறந்துவிட்டு
செல்ல முடியவில்லை
என்னை உன்னிடம் 
இழந்துவிட்டு செல்கிறேன்.....

ஒரு நொடி

இந்த ஒரு நொடி
போதுமடா
என் பிறப்பிற்கு...
இந்த ஒரு அனைப்பு
போதுமடா
என் கண்ணீருக்கு....
இந்த ஒரு முத்தம்
போதுமடா
என் காதலுக்கு...
நீ ஒருவன் மட்டும்
போதுமடா
என் வாழ்க்கை வாழ்வதற்கு....


கன்னமும் இதழ்களும்

உன் முத்தத்தால்
என் கன்னமும்
சிவந்து விட்டது...
உன் இதழ்களும் 
தேய்ந்து விட்டது...

இதழோரம்

என் நெற்றியில் பதித்த
முத்தத்திற்கு முகவரி
தேடி அலைகிறேன்
எனக்கு சொந்தமான உன்
இதழோரம்..

பட்டாம்பூச்சி கூடு

நீ தொட்டு தொட்டு
பேசும் போதெல்லாம்
என் நெஞ்சுக்குள்ளே
பட்டாம்பூச்சி கூடு
கட்டுதடி...
உன் முந்தானையின் வாசம்
பட்டு என்
மூலைகுள்ளே எப்போதும்
உன் பேச்சாய் கேக்குதடி....

மகளிர் தின வாழ்த்துக்கள்.


தாய்மையின் அடையாளம் பெண்
பெண் ஆண்ளின் உணர்வுகளில்
கலந்துவிட்டவள்
தாய்யாகவும், தமக்கையாகவும்
துணைவியாகவும், தோழியாகவும்
கலந்துவிட்டவள்
பெண்மைக்கு அழகு சேர்க்கும்
உவமை தாய்மை
தாய்மையின் அடையாளம் பெண்
பெண்மையை போற்றுவோம்
அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.


உண்மை காதல்

அழவைத்து அழவைத்து அழுவதுதான்
காதல் என்றால்
நேற்று பிறந்த குழந்தைகூட
காதலிக்கிறது.......

காதல் ஹைக்கூ 2

விலகிச்செல்லும்
போதுதான் மறைத்து
வைத்த காதல் யாவும் 
உயிரை சாகடித்து
வெளிப்படுகிறது...

******************************
உன்னை நினைக்கும்
போதெல்லாம் என்
உயிரின் வலி என்
கண்ணில் தெரிகிறது.

******************************
காதலை பற்றி
நினைக்கும் போதெல்லாம்
என் சிந்தனையில்
உன் கண்சிமிட்டல்கள்
மின்னல் வெட்டுகளாய்!!!!!!!!!!!!!

******************************
காதலில் தோற்றவர்களுக்கு
மட்டுமே தெரிந்த ரகசியம்
காதலில் ஜெயித்தவர்களுக்கு
தெரிவதில்லை....

காதல் ஹைக்கூ

காதல் அழகானது தான்
நான் அழகன் அல்ல
நான் அழகாய் இருக்கலாம்
அது காதல் தந்தது...
****************************
உருவமற்ற அன்பிற்காக
இதயம் உள்ள பல
உயிர்கள் ஏங்கும் ஏக்கம்
தான் காதல்......
****************************
என் ஒவ்வொரு
கண்ணீர் துளிக்கும்காரணம் 
நீயாக இருக்கலாம்
அதன்முழுப் பொறுப்பு காதலுக்கு....
****************************
எத்தனையோ பூக்கள் உன் 
கூந்தலில் குடியிருக்க
உன் இதழோரம் பூத்த
பூன்னகைக்கு மட்டும்
தானடி நான் சரணடைகிறேன்.
*****************************
எவ்வளவோ யோசித்துவிட்டேன்
உனக்கும் எனக்குமான காதல்
தொடங்கிய இடத்தை
கண்டுபிடிக்கவே முடியவில்லை

அழகு

யாரோ நெய்த பட்டுப்புடவைக்கு
அழகு சேர்த்து பார்க்கிறது
உன் இளமை பருவம்.
*****************************************
பட்டுச்சேலை வாங்கச்
சொல்லி
என் நெஞ்சு மீது
தலைசாய்த்து
தொட்டாச் சினுங்கி
போல
சினுங்குகிறாய்...
*****************************************
தகுதிச்சுற்றில் தோற்றுவிட்டேன்
என்பதனாலா
என்னை உன் காதல்
பரிச்சையில் நிராகரித்துவிட்டாய்....
*****************************************
எனக்கு உயிரில் கலந்தவனே
என்னை விட்டு எங்கே செல்கிறாய்..
நான் உன்னை மறக்க முயன்றதாலா
இல்லை 
உன்னை மறக்க முயற்சிக்கவில்லை
உன்னை மறக்காமல் இருக்க முயற்சிக்கிறேன்.
என்னைவிட்டு எங்கே செல்கிறாய்.
******************************************
உன்னை நினைக்கும்
போதெல்லாம் என்
உயிரின் வலி என்
கண்ணில் தெரிகிறது.

வாயுதா


காலம் கடந்த காதலுக்கு
வாயுதா வாங்கிக் கொண்டிருக்கிறது
கடிதங்கலும்,கண்ணீரும்.