கேள்வி-பதில்

நான் விழியசைவில்
கேட்ட கேள்விக்கு
ஒரு புன்னகையில்
பதில் கூறிவிட்டு
மறைந்துவிட்டாள்
அவள்
வரும் வரை
என்றும் எப்போதும்
என் காதலின்
காலடியில்....

உங்களுக்கும் பிடிக்கும்

இடம்மாறி துடிக்கும் இதயத்தின்
இடைவெளி இல்லா உச்சரிப்பு
காதல்!


தனிமையில் சிரித்து பாருங்கள்,
கைகோர்த்து நடந்து பாருங்கள்,
இருவரும் விரல்விட்டு நட்சத்திரங்களை
எண்ணிப்பருங்கள்,
காதலின் இதயத்துடிப்பை கேட்டுப்பாருங்கள்,
தோல்மீது சாயுங்கள்,
மடிமீது தவழுங்கள்,
"காமம்" காதலின் ஏற்ப்பாடு
கொஞ்சம் அரங்கேற்றுங்கள்,
உங்கள் நிழல்கலை கட்டி அனைக்க
விடுங்கள்,
முத்தத்தில் முதுற்ச்சி அடையுங்கள்,
ஒரே போர்வைக்குள் உங்களை
சிறை படுத்துங்கள்,
காதோரம் ரகசியம் பேசுங்கள்,
இதழோரம் இசை பாடுங்கள்,
"கொழுசு" காதலின் சிணுங்கல்
கொஞ்சம் இசைத்துப்பாருங்கள்,

இவை அனைத்தையும் கற்ப்பனை
செய்து பாருங்கள்
"காதல்" உங்களுக்கும் பிடிக்கும்.

அந்த நாள்...

என் கருவிழிகள் இரண்டும்
இருண்டு கிடக்கிறது......
உன் கருவறையில்
நான் வசித்த அந்த
நாட்களை போல!!!!!

பாசத்துடன் நான்...



அன்பான அம்மாவிற்கு....
***********************************
உயிருக்குள் உயிர்
சுமந்தது ஒரு உயிர்
***********************************
நான் வசித்த முதல் வீடு
உன் கருவறை
பத்துமாதம் சேதிக்கினாய்
உன் கருவறையில்
***********************************
நீ மறுபிறவி எடுத்து எனக்கு
முதற்பிறவி தந்தாய்
உன்னை அழவைத்தேன் எனக்கு
முத்த மழை பொழிந்தாய்
***********************************
கைபிடித்து கூட்டிச்சென்றாய்
நிலவை காட்டி சோறுட்டினாய்
***********************************
என் கருவிழிகள் இரண்டும்
இருண்டு கிடக்கிறது
உன் கருவறையில்
நான் வசித்த அந்த
நாட்களை போல
***********************************
மீண்டும் மீண்டும்
உன் மகனாக பிறக்க
ஆசை...
தாயே!
உன் கருவறை
கிடைக்குமென்றால்......