ஒரு நொடி

இந்த ஒரு நொடி
போதுமடா
என் பிறப்பிற்கு...
இந்த ஒரு அனைப்பு
போதுமடா
என் கண்ணீருக்கு....
இந்த ஒரு முத்தம்
போதுமடா
என் காதலுக்கு...
நீ ஒருவன் மட்டும்
போதுமடா
என் வாழ்க்கை வாழ்வதற்கு....


கன்னமும் இதழ்களும்

உன் முத்தத்தால்
என் கன்னமும்
சிவந்து விட்டது...
உன் இதழ்களும் 
தேய்ந்து விட்டது...

இதழோரம்

என் நெற்றியில் பதித்த
முத்தத்திற்கு முகவரி
தேடி அலைகிறேன்
எனக்கு சொந்தமான உன்
இதழோரம்..

பட்டாம்பூச்சி கூடு

நீ தொட்டு தொட்டு
பேசும் போதெல்லாம்
என் நெஞ்சுக்குள்ளே
பட்டாம்பூச்சி கூடு
கட்டுதடி...
உன் முந்தானையின் வாசம்
பட்டு என்
மூலைகுள்ளே எப்போதும்
உன் பேச்சாய் கேக்குதடி....