பாசத்துடன் நான்...



அன்பான அம்மாவிற்கு....
***********************************
உயிருக்குள் உயிர்
சுமந்தது ஒரு உயிர்
***********************************
நான் வசித்த முதல் வீடு
உன் கருவறை
பத்துமாதம் சேதிக்கினாய்
உன் கருவறையில்
***********************************
நீ மறுபிறவி எடுத்து எனக்கு
முதற்பிறவி தந்தாய்
உன்னை அழவைத்தேன் எனக்கு
முத்த மழை பொழிந்தாய்
***********************************
கைபிடித்து கூட்டிச்சென்றாய்
நிலவை காட்டி சோறுட்டினாய்
***********************************
என் கருவிழிகள் இரண்டும்
இருண்டு கிடக்கிறது
உன் கருவறையில்
நான் வசித்த அந்த
நாட்களை போல
***********************************
மீண்டும் மீண்டும்
உன் மகனாக பிறக்க
ஆசை...
தாயே!
உன் கருவறை
கிடைக்குமென்றால்......

No comments: