தேவதை

தேவதையை தொலைத்துவிட்ட
ஏக்கத்தில் தொடங்கியது
எனது கவிதை............

பள்ளி பருவத்தில் என்னை
நேசித்த அவளை நிராகரித்திவிட்டேன்...

காதலை சுமந்து வந்தவளை
கண்ணீருடன் அனுப்பிவைத்தேன்..
எத்தனையோ தேடலுக்கு
பின்பு
அவளை கண்டுபிடித்தேன்...

அவள் சாதாரன பெண்
தான்
ஆனால் எனக்கு மட்டும்
கிராமத்து தேவதையாய்
குழந்தையின் சிரிப்பாய்
தாய் பாசத்தால்
என்னை ஏங்கவைத்தவள்....

அன்று காதலை மறுத்தவன்
இன்று ஏங்குகிறேன்....

நேசிக்கிறேன்
மனைவியாய் ஏற்றுக்கொள்ளாமல்
தொலைத்துவிட்ட தேவதையை
தாய்பாசத்தோடு நேசிக்கிறேன்..

தேவதையே!
உன் கணவன் அதிர்ஷ்டசாலியடி
தேவதையை
கைபிடிக்க போகும் யோகம்
எத்தனைபேருக்கு வரும்...

No comments: