அழகு

யாரோ நெய்த பட்டுப்புடவைக்கு
அழகு சேர்த்து பார்க்கிறது
உன் இளமை பருவம்.
*****************************************
பட்டுச்சேலை வாங்கச்
சொல்லி
என் நெஞ்சு மீது
தலைசாய்த்து
தொட்டாச் சினுங்கி
போல
சினுங்குகிறாய்...
*****************************************
தகுதிச்சுற்றில் தோற்றுவிட்டேன்
என்பதனாலா
என்னை உன் காதல்
பரிச்சையில் நிராகரித்துவிட்டாய்....
*****************************************
எனக்கு உயிரில் கலந்தவனே
என்னை விட்டு எங்கே செல்கிறாய்..
நான் உன்னை மறக்க முயன்றதாலா
இல்லை 
உன்னை மறக்க முயற்சிக்கவில்லை
உன்னை மறக்காமல் இருக்க முயற்சிக்கிறேன்.
என்னைவிட்டு எங்கே செல்கிறாய்.
******************************************
உன்னை நினைக்கும்
போதெல்லாம் என்
உயிரின் வலி என்
கண்ணில் தெரிகிறது.

No comments: