மன்னித்துவிடு.....

என்னை மறந்து
மன்னிப்பதற்கு உன்னால்
முடியும் என்றால்
மன்னித்து விடு....
சாதி என்னும்
சவப்பெட்டியில் இருந்து
என்னால்
மீண்டு வரமுடியவில்லையடா?
நம் இதயம்
இருகப்பிணைத்த பிறகு
சாதி என்ன செய்யும்
என்று தோன்றியதடா
அன்று....
கால ஒட்டத்தில்
சவப்பெட்டியில் சிறையிட
பட்டேனடா?
திசை மாற்றப்பட்டோம்
நமக்கான
வாழ்க்கையோடு மறந்துவிடு
இல்லையேல்
மன்னித்துவிடு.....

No comments: