எப்போதும் என்னுடன்

பிஞ்சு வயசுல என்
நெஞ்சுல
ஆலமரமா வளந்தவ!

அறியா வயசுல
ஊரரிய முத்தம்
கொடுத்தவ!

அப்பன் மாருமேல
வளந்து என்
நெஞ்சோடு வளந்தவ!

இப்போ அறுவது
வயசு.................
இன்னும்
கூடவே வறாயா
சுடுகாட்டுக்கு!

No comments: