வாழ்த்துகிறேன்

இதோ வந்துவிட்டேனடி
உன் திருமணத்திற்கு...

எனக்கு அழைப்பில்லை
உன்னை அதிகம்
நேசித்த நான் மட்டுமே
வாழ்த்தமுடியும்

தோற்றுவிட்டோமோ?
தோற்கடிக்கபட்டோமோ?
என்னை மறந்துவிட்டாய்

அழுகை வறத்தான் செய்கிறது
கடைசியாக ஒருமுறை
அழுதுவிட்டுத்தான் போகிறேனே
உனக்காக
என் காதலுக்காக

தேவதையடி நீ
மணக்கோலத்தில்

என்னை பார்த்திருப்பாய்
என்று நினைக்கிறேன்....
உன்னுடைய கடைசி
நினைவுகள் என்னுல்
எரிந்துகொண்டு இருக்கிறது.

உன்னை பார்க்க வேண்டும்
என்ற ஆசை
நிறைவேறிவிட்டது.
நீ எப்போதும்
புன்னகையுடன் வாழ
வாழ்த்துகிறேன்...

No comments: